என் நினைவில் M. G. R
இந்த கால நடிகர்கள்,விட்டில் பூச்சிகளாக வந்துவிட்டு சினிமா என்ற
விளக்கில் விழுந்து நசிவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கு,
சினிமா என்பது பொழுது போக்கு சாதனம் ஆனால் அதையே
தனக்கு சாதகமாக எப்பிடி பயன் படுத்திகொள்வது என்பதை
மிகத்தெளிவாக தெரிந்து வைத்து இருந்தவர் எம் ஜி ஆர்,
பாட்டு என்றால் தன்னோட சினிமாவில் நல்ல ராகம் இருக்கணும்
ஒரு ரொமான்ஸ், ஒரு தத்துவம், ஒரு ஜாலி என்று இனம் பிரித்து
ஜனரஞ்சகமாக்கிவிடுவார், கதாநாயகி தேர்வும் அப்படியே செலக்ட்
செய்வார், தானே எல்லா வகையான சினிமாவித்தைகளையும் தெரிந்து
வைத்து இருந்தார், டான்ஸ் மூவ்மெண்ட்ஸுக்கு முக்யம் கொடுத்து
சினிமாவில் இப்போது செய்யும் டான்ஸ் அட்டகாசங்களுக்கு
சுழி போட்டவர் எம் ஜி ஆர், மட்டுமே, ஏழைமக்கள்,அன்றாட
கூலி வேலை செய்பவர்கள் கவலையை மறக்க எம் ஜி ஆர்
சினிமா ஆறுதலாக இருந்தது நிதர்சனம்,
அவரோட சண்டைகாட்சிகள் மிகப்பிரமாதமாக இருக்க
மிகப்பிராயாசைப்படுவார், புதிய உத்திகளை கையாண்டு
வட இந்திய பயில்வான்களிடம் பயிற்சிபெற்ற் ஸ்டண்ட்
மாஸ்டர்களை ஏற்பாடு செய்வார் என்பார்கள், தானே
டூப் போடாமல் செய்த சண்டை காட்சிகளும் உண்டென்பார்கள்
கவனம், ப்ரயாசை,பாரபட்சமற்று உதவிசெய்வது,கட்டுகோப்பானஉடம்பு
மனிதாபிமானம், மக்களிடையே எப்போதும் தன்னோட இமேஜ்
குறையாமல் பார்த்துக்கொள்வது எம் ஜி ஆர் அவர்களின்
தனித்தன்மை,ஆகர்ஷணம் என்பார்களே,அதுவே எம் ஜி ஆர்
அவர்களுக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு,
welcome to Anusham
15 years ago
No comments:
Post a Comment