Friday, February 12, 2010

சிவராத்திரியும் ஸ்ரீசைல ஞாபகமும்

த்வாதச் ஜோதிர்லிங்கங்கள் பனிரெண்டு(த்வா என்றால் இரண்டு தசம்
பத்து ) தாமாகவே ஸ்வயம்புவாக்த்தோன்றியதால் அதாவது யாராலும்
ப்ரதிஷ்டை செய்யப்படாத லிங்கங்கள்.வேதகாலத்துக்கும் முன்பிருந்தவை
அளவிடமுடியாத தேஜஸ் (ஒளி) கொண்டலிங்கமூர்த்திகள்.
அவற்றில் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கமும் ஓன்று,
நாங்கள் ஆந்திராவில் இந்த்க்ஷேத்திரத்தை சென்று தரிசித்தோம்,

கஷ்டங்க்ள் நீங்கி நற்கதிஅடைய சிவனுக்கு தனதுக்ஷேத்திரத்திலேயேமிக்க
பிடித்தமான ஸ்ரீ சைலம் நாம் சென்றோமானால் சிவனை ப்ரமராம்பிகையை
தரிசித்து முக்தி அடையலாம், அனுக்ரஹமூர்த்தி சிவனோடு மல்லிகை
கொடியாய் ப்ரமராம்பாள். சிவராத்திரி விஷேசம், ஸ்ரீ சைலத்தில்..

நந்தியை வாஹனமாகவும் நந்தியின் சகோதரன் பர்வதனை மலையாகவும்
சிவன் ஏற்றுக்கொண்ட புண்ணியத்தலம், சிவராத்ரி நாளில் இங்கு சிவனை
வணங்குபவர்களுக்கு பாவவிமோசனம் செய்து முக்திஅளிப்பதாக
பார்வதியிடம் சிவன் கூறுவதாகபுராணம் கூறுகிறது, 108 கஜமுள்ள
துணியை கோபுர நந்தி முகமண்டபத்தில் சுற்றிசிவராத்திரி அன்று
சேனை உற்சவம் நடத்துவார்க்ள். பூஜை முடிந்து துணியை துண்டுகளாக்கி
பக்தரக்ளுக்கு ப்ங்கிடுவார்க்ள். ஜமூலா தலைபாகை உற்சவம் என்பார்கள்,

தூளி தரிசனம் சிறப்பு, வேறூ எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு
இவ்விதமான விதம் கிடையாது, பக்தர்கள் தங்கள் கால்ககளைகூடக்
கழுவாமல் தூசியோடு வந்து தேவாலயத்தில் சுவாமியை தரிசிக்கலாம்
மல்லிகார்ஜுனா லிங்கத்தை தொட்டு பூஜிக்கலாம், ப்ர்த்யேகப்பூஜை இது
என்பார்கள்,தினமும் உண்டு, ஸ்ரீசைல சிகர தரிசன்ம் விஷேசம்,
மலைமேலே வீற்றிருக்கும் நந்தியின் கொம்புகளிடையே இருந்து
மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்க கோபுரதரிசனம் செய்வார்கள்

பாதாள கங்கை க்ருஷ்ணா நதியாக சுழித்துக்கொண்டு வருகிறாள்
சித்தரும் ஞானியரும் தேவர்களூம் மற்றும் ஜீவராசிகளும் மனிதரும்
மலையில் கிடைக்கும் மூலிகைகளாலும், நோய்தீர்க்கும் மூலிகை
வாசமிக்க காற்றாலும் ஸ்ரீ சைலம் தேடி வந்து வசிக்கின்றனர்.

விஞ்ஞானிகள் பூமி ஆராய்ச்சியாளர்கள்.மலையின் மருத்துவ
மற்றும் ரசாய்னத்தன்மையினால் ஆராய்ச்சிமேற்கொண்டுள்ளனர்
ப்ரமரம் என்றால் வண்டு அவற்றை மாலையாக போட்டுக்கொண்டு
அருணாசுரன் என்ற அசுரனை அம்பிகை அழித்ததனால் ப்ரமராம்பாள்
என்ற பெயர் வந்ததாம், இந்த அம்பாள் அஷ்டமா சக்தியில் ப்ராமணீ
சக்தி என்பார்கள்,

நந்தி பூஜை ஆந்திராவில் விஷேசமாகச்செய்வார்கள், மீதம் வைக்காமல்
நந்தி ப்ராசத்ம் சாப்பிடுவோம், அதற்காக அளவாக செய்து பரிமாறுவார்கள்.
மீதம் வைப்பது மற்றப்ரசாதங்களுக்குவேணுமானால் சரியாக இருக்கலாம்
நந்தி பூஜை ப்ரசாதம் மகத்துவம் தனியான சிறப்பு என்கிறார்கள்
மீதம் வைப்பதை.பெறும் தவறாக எண்ணுகிறார்கள்
..
நந்திகேச மஹாபாக சிவத்யான பராயண
உமா சங்கரசேவார்த்தம் அனுக்ஞ்யாம் தாதுமர்ஹ்ஸி

Monday, February 1, 2010

கங்கையும் காசியும்

கங்கையும் காசியும்
சில கோவில்கள், தீர்த்தங்கள் நம்மை மறக்க முடியாமல் செய்துவிடும்.
அவற்றில் கங்கையும் காசியும், என்னோடு வந்தவர்கள் பலர் காசிக்கு
ஏன் தான் வந்தோமோ என்று அலட்டிக்கொண்டார்கள், காரணம்நாங்கள்
மஹாசிவராத்திரி அன்று காசியில் யாத்திரை சென்று இருந்தோம்,
கூட்டம் நிறைய இருந்தாலும் வரிசையில் நின்று பார்த்தோம்,

காசி வாசே லோக புண்யே என்றாக இரண்டு நாட்கள் அங்கே
தங்கினோம், எனக்கு காசி மிகவும் பிடிக்கும், 4 முறை சென்றாலும்
மறுபடி போகதோன்றும் ஒரு ஸ்தலம், காரணம் கங்கைக்கரைதான்
அங்கே கங்கை அமைதியாக வராது, ஹரித்துவாரில் தெளிவாக
ஓடி வரும் கங்கை காசியில் குழம்பி சுழன்று கலங்கி வருகிறாள்.

படித்துறையில் உட்கார்ந்து கங்கை ஏன் நீ இப்படிக் குழம்பி
சுழன்று கலங்கி வருகிறாய் என்று கேட்கத்தோன்றும், அதற்கு
நான் ஒரு விடை நினைத்தேன், இறந்து போன மனிதர்களின்
குழப்பங்கள் வேதனைகள் பாபங்கள், அத்தனையையும்
தன்னுள்ளே வாங்கிக்கொள்வதனால்என்று, கங்கை நீரை
ஆராய்ச்சி செய்த உலகப்புகழ் விஞ்ஞானிகள் கங்கையில்
எந்த நோயாளி அதாவது எயிட்ஸ் நோயாளியானாலும்
ஸ்நானம் செய்தாலும் சாக்கடை நீர் கலந்தாலும் கொசுக்கள்
கிருமிகள் உடனே நசிந்து விடுவதாகவும் கண்டுபிடித்துள்ளார்கள்.

திருப்பதி தொலைகாட்சியில் சிவானந்தலஹரி விளக்கம்
தெலுங்கில் கோடீஸ்வரரவ் என்ற பண்டிதர் சொல்கிறார்
அவர் தெலுங்கில் ஸ்ரீநாத் என்ற கவிஞர் தன்னோட கவிதையில்
காசியில் இறக்கும்மனிதனுக்குஅவன்இறக்கும் தறுவாயில்
அவன் மூச்சு மேலும் கீழுமாக சிரமப்படும்போது அம்பாள்
தன்னோட முந்தானையால் விசிறி நெஞ்சைவருடிவிடுவதையும்
.தன் மடியில் அமர்த்திகொண்டு,என்றும்


காசித்துண்டி விநாயகர் தும்பிக்கையால் மூச்சுக்கு தவிக்கும்
மனிதனுக்கு மூச்சு காற்றை செலுத்தி ஆசுவாசபபடுத்துவதையும்
ப்ருங்கி அந்த மனிதனுக்கு நெற்றியில் விபூதி பூசி விடுவதையும்
சிவன் அந்த மனிதனின் கன்னத்தை மெதுவாக திருப்பி
அவன் காதில் தாரக மந்திரம் ஓதுவதையும், பாகீரதி கங்கம்மா
அவனுக்கு நெஞ்சில் ஜில் என்று தன்னோட கைவைத்து
வாயிலே நீர் விடுவதையும், சிவன் அவன் ஆத்மாவை
தன்னோட சேர்த்து முக்திகொடுப்பதையும்,, கவிஞர் ஸ்ரீநாத்
சொல்லியதை மிக அழகாக விவரித்தார்,

ஸ்ரீ க்ருஷ்ணதேவராயரின் சபையைஅலங்கரித்தவரில்ஸ்ரீநாத் கவி
ஒருவராம், அதி அற்புதமான இந்த கவிதையை கோடீஸ்வரரவ்
பண்டிதர் தெலுங்கில் அதி அற்புதமாக சொல்லி எளிமையாக
விவரித்தார், ஆனால் ராமகிருஷ்ண பரமஹமசர் தன்னோட
த்யானத்தில் ஒரு எறும்புக்கு காசியில் இதேவிதமாக
சிவன் முக்தி கொடுத்ததை பார்த்தாராம், வெள்ளையாக
சிவன் கங்கைக்கரைதனில் நின்று ஆத்மாக்களுக்கு முக்தி
கொடுப்பதை பார்த்து இருக்கிறார் என்கிறார்கள்.கோடீஸ்வரராவ்
சொன்னதுதான் இதுவும்,