Thursday, January 28, 2010

16 டி (நம்பர்) வீடு

16 டி (நம்பர்) வீடு

எங்கள் ரயில்வேகாலனியில் எனக்கு அமைந்த வேலைக்காரி
எர்ரம்மா. “எர்ர” என்ற வார்த்தை சிகப்பு என்று தெலுங்கில்
அர்த்தம், பார்வதம்மா பெயர் என்றும் ஆதி சக்தியின்பெயர்
தனக்கு அமைந்ததாகவும் எர்ரம்மா சொல்லிக்கொள்வாள்,

பார்க்க கறூப்பு என்றாலும் உள்ளம் அவளூக்கு என்னை
போல் வெள்ளை(அசடு) ,விசாகப்பட்டினத்தில் முதன்முதலாக
நாங்கள் காலனிக்கு வந்தபோது அமைந்தவள்,அப்போது
எனக்கு குழந்தைகள் கிடையாது,என்னோட தெலுங்கு டீச்சர்
எர்ரம்மாதான், நாங்கள்முதலில் வேலக்காரி வேண்டாம் என்றே
இருந்தோம், ஊர் புதுசு பாஷை வேறு ப்ராப்ளம்,

எதிர் வீட்டில் வேலை செய்யும் எர்ரம்மா என்னைபார்க்கும்
போதெல்லாம் இப்படி “இளைச்சுல்ல போயீருச்சு” வேலைக்காரி
இல்லாம வேலை செஞ்சுகிட்டு என்பாள்,அவள் பேசுவதிலிருந்து
நானாக தெரிந்து கொண்டேன், அவளுக்கு அவள் சம்பாத்தியத்தை
அதிகப்படுத்த அப்படி சொல்கிறாள் என்று தெரிந்து வேலைக்கு
வைத்துக்கொண்டேன், மாதம் அஞ்சு ரூபாய், எங்கள் வீட்டு
பட்ஜெட் நாங்கள் மூவரும் சேர்ந்துதான் போடுவோம், மாமனார்
அனுபவம் உள்ளவர், அவரிடம்தான் எங்காத்துக்காரர் மாத வரும்படியை
கொடுப்பார், அஞ்சு ரூபாயைத்தவிர எர்ரம்மாக்கு வேறு உதவி
கிடைக்காது தவிப்பாள், கடனாகக்கூட கொடுக்க மாட்டார் என்
மாமனார். வயசான காலத்துல புண்யமில்லாம போயிடும் என்று
அவரிடம் கூறுவாள், முனகிக்கொண்டே வேலை முடிப்பாள்..

நாங்கள் குடிவந்த அந்தவீடு நாங்கள் வருவதற்கு முன்னால்
4 பேர் மாறீவிட்டார்கள் குடிவந்த கொஞ்சநாளிலேயே
தெரிந்தாலும் காரணம் தெரியாது, எங்காத்துக்காரர் ஷிப்ட் டூட்டி
இரவு 2 மணிக்கு செல்வார் காலை மணிபாராது வருவார்,
எப்ப வேணுமானாலும் டூட்டி செல்வார்,உழைப்பு கடினமான
வேலைஅப்போது அவருக்கு,, எனக்கு ரேடியோ துணை
எர்ரம்மா பேச்சு பொழுதுபோகும்,

நாங்கள் இருந்த வீட்டில் ஒருவர் தூக்குப்போட்டுக்கொண்டு
உயிர் விட்டதாக எர்ரம்மா சொன்னாள், என் மாமனார் கடன்
கொடுக்க மறுக்கிறார் என்பதற்க்காக அவள் பொய்
சொல்றாள் என்றே நினைத்தேன், ஆனால் எல்லாருமே
என்னிடமும் என்மாமனாரிடமும் உங்களுக்கு எந்தவிதமான
பயமும் தோணவில்லைய்யா என்று கேட்பார்கள், பேயாவது
பிசாசாவதுவேறு வேலையில்லைஉங்களுக்குஎன்பார் என் மாமனார்.
நான் தூங்கப்போகும்போது தினமும் வீபூதி நெற்றியிலிட்டுகொள்வேன்..

என்னோட முகத்துக்கு நேராககாஞ்சிசுவமிகள்(பெரியவாள்) படத்தை
மாட்டி வைத்து கொள்வேன், எர்ரம்மா.சொன்னபிற்பாடு எனக்கு
என் தலை மாட்டில் வெள்ளை புடவைகட்டி தலை விரித்துக்கொண்டு
ஒரு உருவம் நிற்கிறார்ப்போல் ப்ரமை, என்மாமனாரை இரவு
எழுப்பி சொல்வேன், சதங்கை சத்தம் வேற கேக்கறாப்பல் இருக்கே
என்பார்.. என் பயத்தை அதிகமாக்கிவிடுவார், எர்ரம்மா.பேய்க்கதை
சொன்னதுக்க்குஅப்புறம் நிகழ்ந்தவை இந்த தோற்றங்கள், மூன்றுவருடம்
குடி இருந்தோம் அந்த வீட்டில், நாங்கள் காலனியில் வேறு வீட்டுக்கு
சென்றபின்பு நாங்கள் குடி இருந்த இந்த வீட்டுக்கு குடிவந்தவர்களெல்லாம்
எங்களை மூணு வருஷம் எப்படி இந்த பேய்வீட்டில் குடி இருந்தீர்கள்
என்று?,கேட்ப்பார்கள். எனக்கே கேள்விக்குறிதான் இன்றுவரை.
16 டி நம்பர் குவார்ட்டர் மறக்கமுடியாத வீடு

No comments:

Post a Comment