Friday, September 3, 2010

கோஹினூர் வைரம்


கோஹினூர் வைரம்

ஹிந்து புராணங்களில் கோஹினூர் 5000 வருடங்கள் பழமையானவைரம்,
இந்த கோஹினூர் வைரம் சதயபாமாவின் தந்தையான சத்யாஜித்திடம்
இருந்ததாம் ஜாம்பவான்என்பவரிடம்கைமாறி கடைசியில் ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவான்
பெண்ணை திருமணம் செய்து பெற்றார் என்பார்கள், “ச்யமந்தகமணி” என்ற
இந்த் வைரத்துக்கு ஸ்ரீகிருஷ்ணர் சரிதத்தில் தனி கதை இருக்கு, இந்த
ச்யமந்தகமணி” யால் யாதவகுலம் அழிந்தாலும், செல்வசெழிப்பும் பெற்றதாம்

700 வருடங்களுக்கு முன்னால் நம் நாட்டின் புண்யநதியான கிருஷ்ணா
கோதாவரி நதி கரைகளில் உள்ள சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்டது,

கோஹினூர் கண்டெடுக்கப்பட்ட இடம் கர்நாடகமாநில பகுதியாம்.
முகலாயமன்னர் பாபரின் மகன் ஹூமாயூன் இப்ரஹாம் லோடி எனற
அரசனை ஜெயித்து இந்த் அபூர்வவைரத்தை பெற்றாராம்,

பாரசீக ராஜா நாதீர் ஷா முகலாயமன்னர்களை வென்றார், அதில்
ஒருமுகலாய மன்னர் தன் தலைப்பாகையில் கோஹினூர் வைரத்தை
மறைத்து வைத்து மற்ற தங்க வைர நகைகளை நாதீர் ஷாவிடம்
கொடுத்தாராம், அப்போது நாதீர் ஷா வின் மனைவி உலகத்தின்
பெரியவைரம் முகலாயமன்னர்களிடம் உள்ளது தலைப்பாகையில்
ஒளித்து வைத்து இருக்கலாம்,என்று ரகசியமாக நாதீர் ஷாவிடம் சொல்ல

நாதீர் ஷா தந்திரமாக முகலாய மன்னரிடம்
நமக்குள் சமாதனம் செய்துகொள்வோம் என்று சொல்லி தலைப்பாகை
மாற்றிக்கொள்ள சொன்னாராம், வேறு வழி இல்லாமல் தலைப்பாகை
மாற்றிக்கொண்ட முகலாய மன்னர், தலைப்பாகைக்குள்இருந்த கோஹினூர்
வைரத்தை அந்தப்புரம்சென்று நாதீர் ஷா பார்த்து வியந்தாராம்,

இதன் விலை நிர்ண்யிக்கமுடியாது, உலகுக்கே உணவு அளிக்கலாம்
ஒருநாளைக்கு என்றாராம், கோஹினூர் என்றால் ‘ஜோதிமலை” என்று
பொருள்.முகலாயவமசம் அழிந்த்து, பாரசீகவம்சம் அழிந்த்து,
ஆப்கானிஸ்தானை ஜெயித்து சீக்கியராஜா ரஞ்சித்சிங் கோஹினூர்
வைரத்தை இந்தியாவின் ஒரு ஹிந்து கோவிலுக்கு கொடுக்க உயில்
எழுதி வைத்தார், சீக்கிய ராஜ்யம் அழிந்த்து, கிழ்க்கிந்தியர் ஆட்சி
வந்த்து, ப்ரிட்டிஷ் ப்ரபு டல்ஹொஸி ரஞ்சித்சிங் உயிலை மதிக்காமல்

விக்டோரியா ராணிக்கு கோஹினூர் வைரம் கொடுக்க்ஏற்பாடு செய்தார்
,விக்டோரியா ராணியின் கணவர் ஆல்பர்ட் 186 கேரட்
வைரத்தை 105 கேரட் ஆக பட்டை தீட்டினார், விக்டோரியா ராணியின்
மகுடத்தில் 2000 வைரங்களுக்கு நடுவே நடுநாயகமாக கோஹினூர் விளங்கியது,
ராணிகள் மட்டுமே அணியவேண்டும் என்ற சட்டம் இருந்த்து,
இன்று சாபத்திற்க்கு பயந்த்தோ என்னவோ லண்டன் டவர் கோட்டையில்
ப்ரிட்டிஷ் மன்னர்களின் அணிகலன்களுடன் பத்திரமாக உள்ளது,
விஷேச விழாக்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறார்கள்,

நன்றி “மாம்பலம் டைம்ஸ்”

No comments:

Post a Comment