Saturday, May 22, 2010

திருக்கோளூர் பெண்மணி

திருக்கோளூர் பெண்மணி (ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும் என்ற புத்தகத்திலிருந்து)

நம்மாழ்வாரின் சிஷ்யரான மதுரகவிஆழ்வாரின் சொந்த ஊர் திருக்கோளூர்.
ராமானுஜர் திருக்கோளூர் தேடிவ்ந்தார்,வ்ழியில் ஒரு பெண்ணிடம் திருக்கோளூர்.
எங்கே உள்ள்து என்று விசாரித்தார், நீ அங்கே தான் வசிக்கிறாயா என்று கேட்டார்,
ராமானுஜர் கேட்டதற்க்கு அந்த பெண் ராமானுஜரை பார்த்து கும்பிட்டு
இப்படிச்சொன்னாள்..
முயல் புழுக்கை வயலிலே கிடந்தென்ன வரப்பிலே கிடந்தென்ன?
அகம் ஒழித்தேனா விதுரரைப்போல,
தாய்க்கோலம் செய்தேனா அனுசூயைப்போல
பிஞ்சிலே பழுத்தேனா ஆண்டாளைப்போல்,
அந்தரங்கம் சொன்னேனா த்ரிஜடையைப்போல
தெய்வத்தைப்பெற்றேனா தேவகியைப்போல்,
ஆயனை வளர்த்தேனா யசோதையைப்போல
அவல் பொரி ஈந்தேனா குசேலரைப்போல,
ஆயுதங்கள் ஈந்தேனா அகஸ்தியர் போல
இடை கழியில் கண்டேனா முதலாழ்வார் போல,
வழிஅடிமை செய்தேனா இளையாழ்வார்போல
அக்கரையில் விட்டேனா குக்ன் ஆழ்வார்போல்.
கண்டுவந்தேன் என்றேனா திருவடியைப்போல
ராமானுஜர் கண்களில் கண்ணீர் தாரை வழிந்ததாம்.
எத்தனை நுணுக்கமாக திருக்கோளுரில் வசிக்க பெரும்பேறு பெற்று இருக்க வேண்டும்
என்ப்தை தெரிவித்து இருக்கிறாள் திருக்கோளூர் பெண்மணி,

No comments:

Post a Comment