Saturday, March 13, 2010

வேளுக்குடி சொற்பொழிவிலிருந்து சில தகவல்கள் ந்ம்மாழ்வாரைப்பற்றி

நம்மாழ்வார் வேளாளர் என்ற விவசாய இனத்தவர், தந்தை காரிமாறன் திருக்குருங்கூர்
என்ற ஊரைசேர்ந்தவர் தாயார் உதயநங்கை, நெடுநாட்களாக குழ்ந்தை இல்லாத தம்பதிகள், மஹாவிஷ்ணுவின் பக்தர்கள், பகவான் தன்னோட அம்சமாக இந்த
தம்பதிகளுக்கு விஷ்வ்க்சேனர் பிறப்பார் என்று கோவில் அர்ச்சகர் வாயிலாக
தெரிவித்தாராம், மற்ற குழ்ந்தைகள் மாதிரி பிறந்தாலும் பிறந்தவுடன் அசையாமல்
அழாமல், கண்கள் திறக்காமல் இருந்ததாம்,மாறுதலாக இருந்த்தால் மாறன் என்ற
பெயர் வைத்தார்கள்,திருக்குறுங்குடியில் ஆதிநாத சுவாமியிடம் முறையிட்டார்கள்,
திருக்குருங்குடிகோவிலில் ஆழ்வார் பிறக்கும் முன்பு ஆதிசேஷன் புளியமரமாக
அவதாரம் செய்தாராம், புளியங்காய் இங்கே பழமாகாமல் விளையும் அதிசியம்
இன்றும் பார்க்கலாமாம்,இரவில் இலைகள் மூடாது மற்ற மரங்களைப்போல்
அதனால் உறங்காப்புளியமரம் என்ற பெயர் இந்த மரத்துக்கு, லட்சுமணரை
போல், ஆழ்வார்திருநகரி என்றபெயர் நம்மாழ்வார் இங்கே வந்து அமர்ந்ததால்..பெயராகியது
பெற்றோர் ஒரு தொட்டிலில் குழந்தையை போட்டு கோவிலில் சுவாமியிடம் முறையிட்டனர்,
குழந்தை ஒர் நாள் தொட்டிலிலிருந்து கீழே இறங்கி தவழ்ந்து மரத்தடியில் கால்களை
மடக்கி உட்கார்ந்து கண்களை மூடி த்யானத்தில் அமர்ந்ததாம்,16 வருடங்கள் அப்படியே அமர்ந்து இருந்த ஆழ்வாரை மக்கள் கூட்டமாக வந்து தரிசித்து இவர்,
“நம்” ஆழ்வார் என்று பெருமையாகச்சொல்லிகொண்டதால் நம்மாழ்வார் ஆகிவிட்டார்
சடகோபன், பராங்குசன் என்றெல்லாம் அழைப்பார்கள்.நம்மாழ்வார்பிறப்புக்குமுன்னால் “யானை வரும் முன்னே மணி ஒசை வரும் முன்னே” என்கிறார் போல் மதுரகவி என்பார் திருகோளூரைச்சேர்ந்தவர் பிறந்து இருந்தார் நம்மாழ்வாரைவிட பெரியவர், வட இந்திய யாத்திரை சென்று இருந்தாராம், அயோத்தியில் அவர் ஒரு ஒளியைதரிசித்தார், தெற்க்கு திசையில் தோன்றி அதன் ஆகர்ஷ்ணத்திற்க்கு ஆட்பட்டு அதன் பின்னால் வந்தாராம் அந்த ஒளி திருக்குறுங்குடியில் ஆதிநாதர் கோவிலில் வந்து சேர்ந்ததாம், மதுரகவி நம்மாழ்வாரின் தேஜஸ்தான் தன்னை இவ்விடம் கொண்டு வந்து நிறுத்திஉள்ளது என்பதை அறிந்தாராம்,
,மதுரகவி ஆழ்வார் தமிழ் இலக்கிய்மும் மற்றும் வேதாந்தங்களையும் படித்த பண்டிதர் கண்களை மூடி வாய் பேசாமல் இருக்கும் நம்மாழ்வாரை பரீக்ஷை செய்ய எண்ணினார்
,ஒருகல்லை பக்கத்தில் உள்ளகுளத்தில் போட்டார் சத்தம் கேட்டு நம்மாழ்வார் விழித்துக்கொண்டார்,
மதுரகவி அவரிடம்.
,
“செத்தது வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்டாராம்
அதற்க்கு நம்மாழ்வார் “அத்தைத்தின்று அங்கே கிடக்கும்” என்றாராம், அதாவது மனிதன்
இருக்கும் வரை மூளை அவன் அறிவு உடல் ஆத்மாவோடதொடர்புடன் செய்ல்படுகிறது
இறந்தபின்பு ஆத்மா அப்படியே இருக்கிறது, உடம்பு செத்துவிடுகிறது, ஆத்மா
தொடர்ந்து பகவானின் தொடர்புக்கு இணங்க செயல்படுகிறது என்ற அர்த்தம் பிறந்தது
(சிறியது) ஆத்மா, (செத்தது மனித உடம்பு),பகவானின் கட்டளைக்கு காத்து இருக்கும்
ஆத்மாவோ, நமோ நாராயணா என்று இருக்குமாம்,
மதுரகவி நம்மாழ்வாரின் கால்களில் விழுந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ள
வேண்டினார்,நம்மாழ்வாரின் பதிலில் இருந்த தெளிவும் ஆழமும் மதுரகவிக்கு
நம்மாழ்வாரை தன்னோட குருவாக ஏற்றுக்கொள்ள ஏக்கம் கொள்ளசெய்தது,
நம்மாழ்வார்எழுதசொன்ன பாசுரங்கள் Sriya:pathi என்றாக மதுரகவி எழுதினார்
என்பார்கள், மதுரகவி நம்மாழ்வாரை பகவானாக்வே கண்டதால் ஆதிநாதனை
பாடாமல் கண்ணின் நுண் சிறுத்தாம்பு என்ற கவிதையில் நம்மாழ்வாரை பாடினாராம்
அத்துணை குரு பக்தி, 35 வருடங்கள் புளியமர்த்தடியில் நம்மாழ்வார் இருந்தாராம்நம்மாழ்வார்
ஆசிர்வாதமாககொடுத்த நம்மாழ்வாரின் ஸ்வர்ணவிக்ரஹம் மதுரக்வி ஸ்ரீமன் நாராயண்னைக்கூட
கும்பிடாமல் நம்மாழ்வாரை பூஜை செய்வாராம், எல்லா திவ்யதேச பெருமாளும்
மற்றும் திருக்குருங்குடி ஆதிநாதபெருமாளும் அவ்ரவரவர் மேலே நம்மாழ்வார்
எழுதியபாசுரங்களை புளியமரத்தடிக்கே வந்து பெற்றுச்சென்றதாக கூறுகிறார்கள்
கருடவாஹனத்தில் மஹாலட்சுமியுடன் தரிசனம் செய்தாராம் பெருமாளை நம்மாழ்வார்
ரிக் சாம அதர்வண யஜூர் நான்கு வேதங்களின் சாராம்சமே திருவாய்மொழி
அப்பன் கோவிலில் இன்றும் சங்கில் குழந்தையான நம்மாழ்வார்க்கு பால் ஊட்டும்
உற்சவம் நடக்கின்றது, மாசிவிசாக்ம், வைகாசி விசாகம்(பிறந்தமாதம்)
இரண்டும் திருக்குறுங்குடி க்ஷேத்திரத்தில் விஷேச்ம்,கலியுக ஆரம்பத்தில்
நம்மாழ்வார் அவதாரம் செய்தார், அவருடைய பாசுரங்கள் அந்தாதி வகை
சேர்ந்தவையாகும், அடிவரவு என்பார்கள், ஒவ்வொருபாசுர முடிவும் அடுத்த
பாசுர ஆரம்பவார்த்தை அமையும் விதமாக இருக்கும், பகவானை
ப்ரபாவம் அதாவது அருள் எங்கும் பரவியிருக்கும்ப்ரமம், கருணை
அழகு என்று ஆழ்வார்கள் பாடி பஜனைவ்ழியே காதல் நாயகா
நாய்கி பாவ்ம்கொண்டு, தூது சென்று ,என்றுபலவிதமாக பகவானை
பக்தி செய்கிறார்கள், ஆழ்வார் அனைவரும் இவ்விதமாக பக்தி
செய்தாலும் நம்மாழ்வார் பாசுரங்களில் அதிகமான உணர்ச்சி
பாவம் உள்ளதாம், ந்ம்மாழ்வாரின் தலையில் கீரிடம்போல்
பகவான் அமர்ந்து அதற்கென்றே ஒரு உற்சவம் நட்க்கிறதாம்
அன்று திருக்குறுங்குடியில் பெருமாள் வைரமுடி சேவை
சாதிக்கிறார்ராம், கலியுக் ஆரம்பத்திலேயே ராமனுஜரின்
விக்ரஹம் நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரால் கொடுக்கப்பட்டதாம்
ராமனுஜர் சமஸ்க்ருதம் பரவியிருந்த அந்தகாலத்தில் தமிழில்
எழுதி இருந்த நம்மாழ்வார் பாசுரங்களை அப்போதைய
கால சம்ஸ்தானங்களில்விவரித்து மொழிபெய்ர்த்து அதற்கு பாஷ்யம்
எழுதி மக்களிடையே பரவச்செய்தார் என்கிறார்க்ள்

No comments:

Post a Comment