Sunday, January 3, 2010

சோட்டாணிக்கரை பகவதி

சோட்டாணிக்கரை பகவதி

சிலிர்க்கவைக்கும் சோட்டாணிக்கரை பகவதி தரிசனம், ஒரு வேட்டுவப்பெண்ணுக்கு ஜோதியாக தரிசனம் கொடுத்ததால் ஜோதியானக்கரா என்று பெயர் மாறி
சோட்டாணிக்கரா ஆனதென்பார்கள், பகவதி விடியற்காலை
வித்யா ஸ்வருபிணி மத்யான காலத்தில் லட்சுமியாகவும்,இரவில் துர்க்கையாகவும்
காட்சிகொடுக்கிறாள். சோட்டாணிக்கரை பகவதிஎன்றால் ஏதோ
பேய் ஆவி உலகு சம்பந்தமான பகவதி என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்,
இது தவறு,அம்பாள் சாந்தஸ்வரூபிணி, முப்பெருந்தேவி, மைசூர் சாமுண்டீஸ்வரி,
மூகாம்பிகை, சோட்டாணிக்கரை பகவதி, மூவரும் ஓன்றே, ஆதி சங்கரரின்
வேண்டுதலால் மூன்று இடத்திலும் அம்பாள் சாந்நித்தியம் கொண்டுள்ளாள்.

தீவினைகளினால் வந்த மனப்பேயை விரட்டும் தெய்வம், சரஸ்வதி பூஜை
அன்று அக்ஷ்ராப்பியாசம் குழந்தைகளுக்கு இங்கே செய்விக்கிறார்கள்...
சோட்டாணிக்கரை பகவதி நம் மனக்கவலை அகற்றி அருள் புரிகிறாள்,
வீட்டில் சோட்டாணிக்கரை பகவதி உருவப்படம் வைத்து பூஜை செய்ய
குறைகள், நீங்கும், செய்வினை மாந்திரீகம் இவை அருகில் அண்டாது
என்று பூரண நம்பிக்கை கேரள மக்களுக்கு, நாமும் சரண் அடையலாம்
சோட்டாணிக்கரை பகவதி அம்பாளை,

ஒவ்வொரு மனிதன் உடலிலும் ஒருவிதமான காந்த ஈர்ப்பு சக்தி உள்ளது
அந்த காந்த ஈர்ப்பு சக்தியானது எண்ணற்ற அம்பாளின் அபிஷேகத்தின்
போது, தூப தீப ஆராதனையின் போது மெல்லிய ஒளி மற்றும் மேள
தாள ஒலி அலைகளாக மிதந்து நம்மேல் படும்போது (ஆண்கள் சட்டை
அணிந்து வராமல் வரவேண்டும் கேரளகோவில்களில் கட்டுப்பாடு
வைத்துள்ளார்கள்,) அந்த அலைகளை இழுத்து நம் உடல் உள்
வாங்கிக்கொள்கிறதாம், பெண்களுக்கு இயற்கையிலேயே உடலமைப்பு
சக்தியான் அலைகளை உள் வாங்கிக்கொள்ளும் மின்காந்த ச்க்தி
அதிகமாம் ஆண்களைவிட,, அது தவிர நகைககள் தங்கம் வெள்ளி
மின் கம்பிபோல் இயங்கி உள்வாங்கிக்கொள்ளுமாம், இது மனிதருக்கு
ஒருவித மருத்துவ சிகிச்சையாம், சோட்டாணிக்கரை பகவதி ஆதி
சங்கரருக்கு காஷாயம் வைத்து கொடுத்து தன்னோட கோவிலின்
அமைப்பை எப்படி அமைப்பது என்பதற்காக கடுமையான தவம்
இருந்த ஆதி சங்கரர்ரின்சரீரக்ஷீணத்தைதணித்ததாக் சொல்கிறார்கள்.
பகவதி ப்ரார்த்தனை தினமும் கூறுங்கள்...
அம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா
பத்ரி நாராயணா

1 comment:

  1. amme narayana lakshmi narayana

    pada pada ragam elutha elutha kaivannam

    ReplyDelete